இன்றைய ராசி பலன் : 30.நவம்பர்.2022 - புதன் கிழமை

நல்ல நேரம் :
காலை : 9.15 - 10.15
மாலை : 4.45 - 5.45
ராகு : 12.00 - 1.30
குளிகன் : 10.30 - 12.00
எமகண் : 7.30 - 9.00
சூலம் : வடக்கு
சந்திராஷ்டமம் :
பூசம், ஆயில்யம்
மேஷம் :
குறிக்கோள் அடைய போராடுவர். தாமதம் ஆயினும் வாகையாகும்.
ரிஷபம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
மிதுனம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவார்.
கடகம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி ஆக்கமாய் அமையும்.
சிம்மம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
கன்னி :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பொதுவாழ்வில் மரியாதை பெறுவர்.
துலாம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை நிழலாடும்.
விருச்சிகம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
தனுசு :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
மகரம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
கும்பம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
மீனம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.