இன்றைய ராசி பலன் -15.ஜூன்.2022. புதன் கிழமை

நல்ல நேரம்
காலை : 6.00 - 7.00
மாலை : 3.30 - 4.30
ராகு : 4.30 - 6.30
குளிகன் : 3.00 - 4.30
எமகண் : 12.00 - 1.30
சூலம் : மேற்கு
சந்திராஷ்டமம் :
ரேவதி, அசுபதி
மேஷம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். புதிய தைரியம் பிறக்கும்.
ரிஷபம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
மிதுனம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
கடகம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
சிம்மம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
கன்னி :
குறிக்கோள் அடைய முயன்றிடுவர். பெரியோர் ஆதரவு கிடைக்கும்
துலாம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
விருச்சிகம் :
உற்றார் உறவினர் வருகை இருக்கும். சுபகாரியமும் கூடி வரும்.
தனுசு :
பணியும் பயணமும் இனிதாகும். ஆதாயமும் தேடி வரும்.
மகரம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.
கும்பம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
மீனம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.