திருமாலின் திருநாமங்கள்.!
 

By 
Tirumāliṉ tirunāmaṅkaḷ.!

விஷ்ணுவிற்குரிய எண்ணற்ற நாமங்களில், எந்த காரியத்தை செய்யும் பொழுது, எந்தப் பெயரை உச்சரிக்கவேண்டும் என்பதை, முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள். அவை வருமாறு :

சாப்பிடும்பொழுது ‘கிருஷ்ணா’ என்றும், படுக்கச் செல்லும் பொழுது ‘பத்மநாபா’ என்றும், யுத்தத்தின் போது ‘சக்ரதாரி’ என்றும், வெளியே கிளம்பும் பொழுது ‘திரிவிக்ரமா’ என்றும் உச்சரிக்கவேண்டும்.

மேலும் கெட்ட கனவு கண்டால் ‘கோவிந்தா, கண்ணா’ என்றும், காட்டு வழியில் செல்லும் பொழுது ‘நரசிம்மா’ என்றும், சுபகாரியப் பேச்சு நடக்கும் பொழுது ‘நாராயணா’ என்றும், மருந்து உண்ணும் பொழுது ‘மகா விஷ்ணு’ என்றும், ஆரோக்கியம் சீராக ‘மாதவா’, ‘கேசவா’ என்றும் நாமங்களை உச்சரிக்க வேண்டும்.

இவ்வாறு உச்சரித்தால் ‘உரு’ ஏறத் திரு ஏறும் என்பதுபோல, காக்கும் கடவுளாம் விஷ்ணுவின் பெயரை உச்சரிக்க உச்சரிக்க, அச்சம் இல்லாத வாழ்க்கை அமையும். 

அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
*

Share this story