விநாயகர் எடுத்த 12 அவதாரங்கள்.!

By 
12 incarnations taken by Ganesha.!

விநாயகர் 12 அவதாரங்கள் எடுத்ததாக, விநாயக புராணம் என்ற நூல் கூறுகிறது. அவை என்னவென்று இங்கே பார்ப்போம்.

வக்ரதுண்ட விநாயகர் :
இவர், உலகம் ஒவ்வொரு முறை அழியும்போது தோன்றி, மீண்டும் உலகத்தை படைப்பதற்கான வழிமுறைகளை பெருமாள், பிரம்மா, ருத்ரன் (சிவ வடிவம்) ஆகியோருக்கு அருளுவார்.

கஜானன விநாயகர் :
சிந்தூரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக அவதரித்தவர்.

விக்கிரன ராஜர் :
காலரூபன் என்ற அரக்கனை கொல்வதற்காகப் பிறந்தவர்.

மயூரேசர் : 
பிரம்மாவிடம் இருந்த வேதங்களை, கமலாசுரன் என்ற அசுரன் திருடிச்சென்றபோது, மயில் வாகனத்தில் சென்று, அவனை வென்று வேதங்களை மீட்டவர்.

உபமயூரேசர் :
சிந்தாசுரன் என்ற அசுரன், தேவர்களை சிறை வைத்தபோது அவனை அழித்தவர்.

பாலச்சந்திரர் :
தூமராசன் என்ற அசுரனை கொன்றவர்.

சிந்தாமணி :
கபிலர் என்ற முனிவரிடம் இருந்த சிந்தாமணி என்ற அற்புதப்பொருளை, கனகராஜன் என்பவன் திருடிச் சென்றான். 

உயிர்காக்கும் இந்த சிந்தாமணியை, அவனிடமிருந்து மீட்டவர்.

கணேசர் : 
பலி என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தியபோது, 5 முகத்துடன் தோன்றி அவனை அழித்தவர்.

கணபதி :
கஜமுகாசுரனை வென்றவர்.

மகோற்கடர் :
காசிராஜன் என்ற புகழ்பெற்ற அரசனுக்கு நராந்தகன், தேவாந்தன் என்ற கொடியவர்கள் துன்பம் செய்துவந்தனர். 

இதனால், உலகத்தில் தர்மம் அழிந்தது. அவர்களை நாசம் செய்ய அவதரித்தவர்.

துண்டி : 
துராசதன் என்ற அசுரனை வென்றவர்.

வல்லபை விநாயகர் : மரீசமுனிவரின் மகளான வல்லபையை திருமணம் செய்தவர்.
*

Share this story