திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம், நாளை தொடக்கம்..

By 
thiru3

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். 

மேலும், திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து, கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள். 

மாதந்தோறும் வரும் பவுர்ணமி மட்டுமின்றி, முக்கிய விசேஷ நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். 

இந்த மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் நாளை வியாழக்கிழமை காலை 10.16 மணிக்கு தொடங்கி, நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு நிறைவடைகிறது.
*

Share this story