நவராத்திரியில் அகண்ட தீப வழிபாடு, அனைத்து சௌபாக்கியங்களும் வரும்..

By 
navarathrideepam

நவராத்திரி நாட்களில் சகல கலாவல்லி மாலை, அபிராமி அந்தாதி, சவுந்தர்ய லகிரி, லலிதா சகஸ்ரநாமம் ஆகியவற்றைதவறாமல் பாராயணம் செய்தல் வேண்டும். அது போல நவாவரண பூஜை, சுவாசினிபூஜை, கன்யா பூஜைஆகியவற்றை செய்தல் வேண்டும்.

இது அளவற்ற பலன்களை அள்ளித் தரும். வேலை நிமித்தம் காரணமாக எல்லாராலும் இந்த பாராயணம், பூஜைகளைசெய்ய முடிவதில்லை. இத்தகையவர்களுக்காகவேநமதுமுன்னோர்கள் அகண்ட தீபம் ஏற்றும் ஒரு வழி முறையை கூறி உள்ளனர். 

அகண்ட தீபம் என்பது விளக்கை தொடர்ந்து எரிய வைப்பது ஆகும். நவராத்திரி கடைசி 3 நாட்கள் அல்லது கடைசி நாள் இதை செய்யலாம். 

தேவியை பூஜிக்கும் இடம் அருகில் ஒரு மரப்பலகையில் மூன்று கோணமாக சந்தனத்தால் கோடு போட்டு நடுவில் சந்தனம்குங்குமமிட்டு, பூ போட்டு அதன் மீது விளக்கு வைக்க வேண்டும். 

அம்மனுக்கு இடது பக்கம், வலது பக்கம் என இரு பக்கங்களிலும்விளக்கை ஏற்ற வேண்டும். ஒரு விளக்கு மண் அகல் விளக்காகவும் மற்றொன்று வெள்ளிஅல்லது பித்தளை விளக்காகவும் இருக்கலாம். 

நவராத்திரி 9 நாட்களும் இந்தஇரு விளக்குகளும் தொடர்ந்து எரிவது நல்லது. இல்லையெனில் கடைசி 3 நாட்கள் அல்லது கடைசி நாள்விடாமல் எரிய வேண்டும். 

நவராத்திரி முடிந்ததும் இந்த இரு விளக்குகளையும் தானமாக கொடுத்து விட வேண்டும். இந்த அகண்ட தீப வழிபாட்டால், சகல சவுபாக்கியங்களும் உண்டாகும்.
 

Share this story