பூஜையுடன் கொடியேற்றம் : வெள்ளை விநாயகருக்கு, சதுர்த்தி விழா தொடங்கியது..
கும்பகோணத்தில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில், அல்லது சுவாமிமலை அருகே அமைந்துள்ள திருவலஞ்சுழி ஸ்ரீசெஞ்சடைநாதர் சிவன் கோவிலில், வெள்ளை விநாயகர் அருள்புரிகிறார்.
இக்கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிறப்பு பூஜை :
இக்கோவிலில், விநாயக சதுர்த்தி விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு, விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அப்போது, கொடிமரம் அருகே வாணி-கமலாம்பிகா சமேத வெள்ளை விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
சாமி புறப்பாடு :
வருகிற 11-ந்தேதி வரை விழா நாட்களில் காலை, மாலை இருவேளைகளிலும் சாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா உள் பிரகாரத்திலேயே நடைபெறுகிறது.
விழாவில் 6-ந்தேதி பஞ்சமூர்த்தி புறப்பாடும், 8-ந்தேதி திருக்கல்யாணமும், 10-ந் தேதி காலை 7 மணிக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தேவேந்திரன் பூஜையும், மாலை மூஷிக வாகனத்தில் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
தேரோட்டம் ரத்து :
கொரோனா தொற்று பரவல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்குள் செல்ல பக்தர்கள் அனுமதி கிடையாது என்பதால், விநாயகர் சதுர்த்தி வருகிற 10-ந்தேதி வெள்ளிக்கிழமை என்பதால், கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
மேலும், அன்றைய தினம் வழக்கமாக நடைபெறும் தேரோட்டமும் ரத்து செய்யப்படுகிறது என கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர்.