பெரிய பலன்கள் தரும், சின்னச் சின்ன பரிகாரங்கள்.!
 

By 
Great benefits, iconic remedies.!

நம்முடைய சில செயல்கள் நமக்கு எவ்வாறு தோஷமாகி நம்முடைய வளர்ச்சியை கெடுக்கிறது என்று நமக்கு தெரியாது. அதுபோல, சில நல்ல செயல்கள் நம்முடைய தோஷத்தை விளக்கி நமக்கு நன்மை செய்யும். 

குறிப்பாக, அதில் கலந்துள்ள மனிதநேயமும், மகோன்னதமாய் தோஷ நிவர்த்திக்கு விரைவில் வழிவிடும் என்பது ஐதீகம். 

இங்கே, மனிதம் மாண்புற வாழவைக்கும் எளிய பரிகாரங்கள் குறித்து, இனி பார்ப்போம்.

* படுக்கை அறையில் தலை அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு, அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட, சுக்ர தோஷம் படிப்படியாக குறையும்.

* அடிக்கடி பசுவிற்கு வாழைப் பழம், கற்கண்டு பொங்கல் கொடுப்பது, சந்திரனின் ஆசிகளை நமக்குக் கொடுத்து புகழைப் பெற்றுத் தரும்.

* வசதி இல்லாத குடும்பத்தினருக்கு ஈமச் சடங்குகள் செய்ய பணம், பொருள் கொடுத்து உதவி செய்தல், சனியின் ஆசிகளை கொடுத்து ஆயுளை விருத்தி செய்யும்.

* ஆசான், வேதம் படித்தவர், நம் முன்னோர்கள் மற்றும் சாதுகளை விழுந்து வணங்கிட, புண்ணிய யாத்திரைக்கு இல்லாதவருக்கு பொருள் கொடுத்து உதவுவது, குழந்தை பெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவது, குருவின் ஆசிகள் கிடைக்கும்.

* சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும், பசித்து தவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும், கோவிலுக்கு சொர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது, தொழு நோய் மற்றும் குஷ்டம் கண்டவர்களுக்கு வைத்தியச் செலவு அல்லது அவர்களுக்கு நல்ல உணவு அளிப்பது, சூரியனின் ஆசிகளை கொடுத்து, நல்ல ஆரோக்கியம் மற்றும் வம்ச விருத்தி செய்யும்.

* திருமணம் செய்ய ஏழைப் பெண்களுக்கு பொருள் கொடுத்து உதவுதல், நாம் வாழும் மனை, தொழில் செய்யும் மனைகளைத் தொட்டு வணங்குதல், மேலும், பூமிக்கு மரியாதை செய்தல், பல உயிர்களை வளர்த்தல் (விலங்கு, பறவைகள்), உயிர்ப் பலிகளைத் தவிர்த்தல், இல்லாதவர்களுக்கு மருத்துவச் செலவிற்கு பணம் கொடுத்தல் செவ்வாயின் ஆசிகளை கொடுத்து, அஷ்ட சுகங்களையும் தரும்.

* ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு பொருள் உதவி செய்தல், புதன்கிழமை தோறும் அன்னதானம் செய்தல், புதிய உடைகளை தானம் செய்தல் (குறிப்பாக குளிர் காலத்தில் செய்வது) புதனின் ஆசிகளை நமக்கு கொடுத்து சண்டை, பொறாமையினால் வரும் நோய் (திருஷ்டி) நீதிமன்றச் சோதனை போன்ற தொல்லைகளை விலக்கி, நல்ல தொழில், மேன்மையான வாழ்க்கையைக் கொடுக்கும்.

* குடி கெடுத்தவன், குடிகாரன், குரு துரோகி, பசுவைக் கொன்றவன், சண்டாளன் இவர்களிடம் நட்பு கொள்ளாமல் தவிர்ப்பது, ராகு -கேது ஆசிகளை கொடுத்து அதிர்ஷ்டம், போகம், மற்றும் சகல பாக்கியத்தை அனுபவிக்கும் ஆசிகளை தரும்.

* பாழடைந்த சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவது, பிரதோஷ நாளில் சிவஸ்தலங்களுக்கு முடிந்த வரையிலான அபிஷேகத்திற்கு தேவையிலான பொருட்களை வாங்கி கொடுப்பது, வெள்ளத்துடன் பச்சரிசி தூளைக் கலந்து, அந்த கோவிலின் சுற்றுப் பிரகாரத்தில் தூவி விடுவது தேவர்களை சாந்திப்படுத்திவிடும், இவர்கள் நம் முன்னோர்களுக்கு மோட்ச பதவி அளிப்பார்கள்.

இவைகள் பொதுவானவை, ஒரு முறை செய்யும் பரிகாரம் அல்ல. வழக்கமாக, செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. புரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் பலன் ஒன்றுதான்.

Share this story