மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் 10-ந்தேதி கும்பாபிஷேகம்..

இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் கலாசாரத்தை பறைசாற்றும் பெட்டகங்களான கோவில்களைப் புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், 1,000-வது குடமுழுக்காக சென்னை மேற்கு மாம்பலம், காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற 10-ந் தேதி அன்று வெகு விமரிசையாக நடைபெற உள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்து உள்ளார்.
குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம் 9-ந்தேதி நடக்கிறது 2022-2023-ம் நிதியாண்டில் ரூ.140 கோடி மதிப்பீட்டில் 113 தொன்மையான கோவில்களும், 2023-24-ம் நிதியாண்டில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் 84 கோவில்களும் அரசு மானியம், கோவில் நிதி மற்றும் உபயதாரர்கள் பங்களிப்புடன் புனரமைத்து பாதுகாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கிராமப்புற கோவில்கள் மற்றும் ஆதிதிராவிடர்கள் பழங்குடியினர் வசிக்கின்ற பகுதியில் இருக்கின்ற கோவில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள 1,250 கிராமப்புற மற்றும் 1,250 ஆதிதிராவிடர்கள் (ம) பழங்குடியினர் வசிக்கின்ற பகுதியில் இருக்கின்ற கோவில்களை கண்டறியும் பணி நடைபெற்று வருகின்றது.
வல்லுநர் குழுவால் 7,142 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளன. அதில் 2,235 கோவில்களில் ரூ.1,120 கோடி மதிப்பீட்டிலான 5,855 திட்ட மதிப்பீடுகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.