தமிழ் ஞானியின் சத்ய ஞானசபை உணர்வோம்.!

By 
Let's realize the Satya Gnanasabai of the Tamil sage!

அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்கம் அக்டோபா் 5-ஆம் நாள்1823ஆம் ஆண்டு பிறந்து 30 ஜனவரி 1874 ஆம் ஆண்டு மறைந்தார் . 

ராமலிங்கத்தின் முன், மடாலய பெயர் பொதுவாக இந்தியாவிலும், உலகம் முழுவதும் வள்ளலாராகவும் அறியப்படுகிறது. 

19 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய தமிழ்க் கவிஞர்களில் ஒருவரான இவர் மிகவும் பிரபலமான தமிழ்ப் புனிதர்களில் ஒருவராகவும் இருந்தார். 

ஞான சித்தர்கள் என அறியப்படும் தமிழ் ஞானிகளின் வரிசையில், அதிக ஞானம் உடையவராகத் திகழ்ந்தார்.

சமாரச சுத்த சன்மார்க சத்திய சங்கம் பரப்பப்பட்டு, கோட்பாட்டில் மட்டுமல்லாமல் நடைமுறையில் இருந்தது. 

தனது சொந்த வாழ்க்கை முறையால் தன்னைப் பின்பற்றுபவர்களிடம் இருந்து, தன்னை ஒரு தூண்டுதலாக கொண்டு, சுத்த சன்மார்க சங்கம் என்ற கருத்தின்படி சாதி முறையை அகற்ற முயன்றார். 

சுத்தாசன்மார்காவின் கருத்துபடி மனித வாழ்க்கையின் பிரதான அம்சம் தொண்டு மற்றும் தெய்வீகப் பழக்க வழக்கங்களுடன் தொடர்புள்ளதாக இருக்க வேண்டும். 

ராமலிங்கா சுவாமி, நிதானமான சக்தியின் அடையாளமாக, விளக்கு ஒளியின் சுடர் வழிபாட்டைப் பற்றி கருத்துரைத்தார்.
 
வரலாறு :

பொய்மை வாழ்க்கை கண்டு அஞ்சிய வள்ளலார், சில வருடங்களில் சென்னையை விட்டு நீங்கி மருதூர், கடலூர், வடலூர் போன்ற இடங்களுக்குச் சென்று தங்க ஆரம்பித்தார். 

இறைவனின் மீது திருவருட்பா என்னும் தெய்வீகப் பாமாலைகளைப் புனைந்தார். வடலூரில் சத்திய ஞான சபை ஒன்றினை 1872 சனவரி 25 இல் நிறுவினார். 

இந்த சத்ய ஞானசபை எல்லா சமயத்தவரும் வந்து வணங்கக்கூடிய ஒரு பொதுவான ஆலயம் ஆகும். 

ஆயினும் கொலை, புலை (மாமிசம்) தவிர்த்தவர் மட்டுமே சபைக்கு உள்ளே புக அனுமதி உண்டு. இந்த சத்ய ஞான சபை எண்கோண வடிவில் தெற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. 

சத்ய ஞான சபையின் முன்மண்டபத்தில் கீழ்ப்புறம் பொற்சபையும், மேற்புறம் சிற்சபையும், மையத்தில் ஞானசபையும் அமைந்துள்ளது. 

மண்டபத்தின் மையத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், ஜோதி வடிவில் விளங்குகிறார். சத்ய ஞான சபை என்பது மனித உடம்பில் தலைப் பகுதியைக் குறிக்கும்.

சிற்சபை :

சிற்சபை என்பது நமது புருவமத்தியாகும். சிற்சபை = சிற்+சபை சிற் என்றால் அறிவு என்றும், சபை என்றால் விளங்கும் இடம் என்றும் பொருள் படும். ஆக சிற்சபை என்பது அறிவு விளங்கும் இடம் ஆகும். 

இதைப் புறத்தில் எடுத்துக் காட்டவே வள்ளலார் சத்திய ஞான சபையினுள் மேற்புறத்தில் பளபளக்கும் வெள்ளி ஒளியொடு விளங்கும் சிற்சபை ஒன்றை அமைத்துள்ளார்.

பொற்சபை :

பொற்சபையில் இறைவன் இருக்கும் நிலையை புறத்தில் எடுத்துக்காட்டவே, சத்திய ஞான சபையினுள் கீழ்ப்புறத்தில் பொன்னிற வண்ணத்தில் பொற்சபை ஒன்றை அமைத்துள்ளார். 

பொற்சபை என்பது அண்டத்தில் சூரியனைக் குறிக்கும். ஒரு பொருளினது உண்மையை அறிவது பொற்சபை அனுபவம் ஆகும்

ஞானசபை :

ஞானசபை என்பது தலையின் உச்சிப் பகுதியைக் குறிக்கும். இறைவன் இருக்கும் நிலையை, புறத்தில் எடுத்துக்காட்டவே சத்திய ஞான சபையின் மையத்தில் ஞானசபை ஒன்றை அமைத்துள்ளார். 

ஞானசபை என்பது அண்டத்தில் அக்கினியை குறிக்கும். கடவுள் நிலையை அறிதல் ஞானசபை அனுபவம் ஆகும்.

எண்கோண வடிவ சபை :

தெற்கு நோக்கிய சபையின் முன்புறத்தில் மூன்று திறந்த வாயில்கள் உள்ளன. இருபுற சிறுவாயில்கள் நமது இரு கண்களையும் மத்தியில் உள்ள பெருவாயில் நமது புருவமத்தியுமாகும். 

அதனுள் முன்புற மண்டபத்தில் மேற்புறத்தில் சிற்சபையும், கீழ்ப்புறத்தில் பொற்சபையும் எதிரெதிரே அமைக்கப்பட்டுள்ளது. 

எண்கோண வடிவிலான சத்திய ஞான சபைக் கட்டிடத்தை பெருமானார் அவர்களே வடிவமைத்துக் கொடுத்துள்ளார். 

இது நமது தேகத்தின் தத்துவ விசார விளக்கமே. அதை புறத்தில் காட்டவே சத்திய ஞான சபையை அமைத்துள்ளார்.

முதல் பிரகாரத்தில் எண்கோண இருப்பு கம்பிச்சுற்றாலையும், அடுத்து எண்கோண கைப்பிடிச் சுவரும், அடுத்து ஞான சபைத் தாய்ச் சுவரும் உள்ளன. இவை ஒன்றுக்கொன்று இடைவெளி எட்டடிகளாம். 

சத்திய ஞான சபையின் உட்புறத்தில், ஆன்ம ஜோதியை உணர முடியாமல் தடுக்கும் இருபத்திநான்கு தத்துவப்பொருட்களை குறிக்கும்பொருட்டு, ஞான சபை தாய்ச் சுவரின் கண் எட்டு வாயிலும், பதினாறு ஜன்னல்களும் அமைக்கப்பட்டுள்ளது. 

உயிரனுபவம் பூரணமாய் பெற்று அருளனுபவ நிலையில் நிற்கும்போதுதான், இந்த இருபத்திநான்கு வாயில்களும் திறக்கப்படும்போதுதான் ஒளிவடிவிலான அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தரிசனத்தைப் பெறலாம்.

Share this story