பத்மாவதி தாயார் கோவில் : இன்று பஞ்சமி தீர்த்தம், நாளை புஷ்ப யாகம்

By 
Padmavathi Mother Temple Panchami Theertham today, Pushpa Yagam tomorrow

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில், வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. 

விழாவின் 7-வது நாளான நேற்று முன்தினம் காலை 8 மணியில் இருந்து காலை 9 மணிவரை உற்சவர் பத்மாவதி தாயார் சூரிய பிரபை வாகனத்தில், வேணு கோபாலகிருஷ்ணன் அலங்காரத்தில் எழுந்தருளி வாகன மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

சர்வ பூபால வாகனச்சேவை :

அதைத்தொடர்ந்து, இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை சந்திர பிரபை வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று செவ்வாய்க்கிழமை, மரத்தேரோட்டத்துக்கு பதிலாக, சர்வ பூபால வாகனச் சேவையும், இரவு குதிரை வாகனச் சேவையும் நடந்தது.

புஷ்ப யாகம் :

நிறைவு நாளான இன்று புதன்கிழமை காலை 11.52 மணிக்கு பஞ்சமி தீர்த்தம் (சக்கர ஸ்நானம்) பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது. 

கோவிலில் உள்ள வாகன மண்டபத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட சிறிய புஷ்கரணியில் பஞ்சமி தீர்த்தம் நடக்கிறது.

நாளை வியாழக்கிழமை மாலை 4 மணியில் இருந்து இரவு 7 மணி வரை புஷ்ப யாகம் நடக்கிறது.

முன்னதாக, கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில், காலை 10.30 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது, என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Share this story