பித்ரு தர்ப்பணம் : பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்.

By 
பித்ரு தர்ப்பணம் : பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்.

தோஷங்கள் பல. இதில், பித்ருக்கள் எனும் முன்னோர்களை வழிபடத் தவறிய தோஷம் மட்டும் நேர்ந்துவிடக்கூடாது. பித்ருக்களின் மனநிறைவில்தான், நம்முடைய வாழ்வும் தொடரும் சந்ததியும் நலமும் வளமும் பெறுகின்றன என புராணங்கள் உரைக்கின்றன.

எனவே, பித்ரு தர்ப்பணம் செய்யும்போது, பின்வரும் வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

1. ஒரு வருடம் நாம் பித்ருபூஜை செய்யாவிட்டாலும் பித்ருக்களுக்கு மனவருத்தம் ஏற்படும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

2. தர்ப்பணங்களை எப்போதும் காலை 7 மணிக்குள் கொடுத்து விடுவது நல்லது.

3. அதிகாலை பிரம்ம முகூர்த்தத்துக்கு முன்பே எழுந்து அதிகாலைக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது.

4. எள்ளுடன் தண்ணீரும் கலந்து அளிக்கப்படும் தர்ப்பணம் பித்ருக்களுக்கு அமிர்தமாக கருதப்படுகிறது.

5. பித்ரு காரியத்துக்குள் தர்ப்பைப் புல் பயன்படுத்துவது நல்லது. தர்ப்பைப் புல்லில் சூரிய ஒளி ரூபத்தில் பித்ருக்கள் வந்து அமர்வதாக ஐதீகம்.

6. நாம் கொடுக்கும் தர்ப்பணங்களை சுவதாதேவி, தர்ப்பைப்புல் மூலம்தான், பித்ருலோகத்துக்கு எடுத்து செல்வதாக ஐதீகம்.

7. புண்ணிய நதிகளின் கரைகளில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு எப்போதுமே சக்தி அதிகமாகும்.

8. நம் முன்னோர்கள் மரணம் அடைந்த நேரம், திதியை மறக்காமல் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அந்த திதியில் பித்ரு தர்ப்பணம் செய்வது மிகுந்த பலன்களைத் தரும்.

9. தர்ப்பணம் செய்யும் போது தாய், தந்தை வழியில் 6 தலைமுறைக்கு முன்பு மறைந்த முன்னோர்களுக்கும் சேர்த்து செய்தால், அவர்களது ஆசிகளும் கிடைக்கும்.

10. அமாவாசை, சூரிய மற்றும் சந்திர கிரகணங்களின்போது செய்யப்படும் தர்ப்பணத்துக்கு, மிக அதிக சக்தி உண்டு.

11. அமாவாசை நாட்களில் அன்னதானம் செய்ய வேண்டியது மிக, மிக முக்கியமாகும்.

12. மறைந்த முன்னோர்கள் நல்லவர்களாக இருந்தாலும் சரி, கெட்டவர்களாக இருந்தாலும் சரி, மகாளயபட்ச நாட்களில் ஆசி வழங்க, நம்மை நிச்சயம் தேடி வருகிறார்கள். இதை புரிந்துகொண்டு அவர்களது ஆசிகளைப்பெற வேண்டியது, நமது பொறுப்பாகும்.

13. தர்ப்பணத்தை சரியான நேரத்தில் உரிய முறைப்படி செய்தால், நம் வாழ்வில் கஷ்டங்கள் என்பதே வராது.

14. பித்ருக்களுக்கு நாம் செய்யும் தர்ப்பணமானது, பல யாகங்களுக்கு சமமானது.

15. கன்யா ராசியில் சூரியன் இருக்கும்போது செய்யப்படும் சிரார்த்தம், பித்ருக்களை ஓராண்டு காலத்துக்கு திருப்தி அடைய செய்யும்.

16. தர்ப்பணம் செய்யாதவன் சண்டாளனாக பிறப்பான் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

17. ஒரு ஆண்டில் ஒருவர் 96 தடவை தர்ப்பணங்கள் செய்ய வேண்டும்.

18. புண்ணிய ஆத்மாக்களுக்கு நாம் கொடுக்கும் தர்ப்பணம், அவர்கள் மேலும் இறையருள் பெற உதவும்.

19. தர்ப்பணம், சிரார்த்தும் செய்யாவிட்டாலும், நம் பித்ருக்கள், நமக்கு உதவுவார்கள். ஆனால், தர்ப்பணம் கொடுத்தால் பித்ருக்களின் முழுமையான ஆசி கிடைக்கும்.

20. பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனைத் திரவியங்களைத் தவிர்ப்பது நல்லது

Share this story