புரட்சியும் அமைதியும்.!
'புரட்சி எண்ணம் கொண்ட ஒரு சிட்டுக்குருவி, வாழ்ந்து வந்தது. இலையுதிர்கால இறுதிக் கட்டம் நெருங்கியபோது, மற்ற குருவிகள் அனைத்தும் தென் திசையை நோக்கிப் பறக்க ஆயத்தமாயின.
ஆனால், இந்த சிட்டுக் குருவி மட்டும் அவைகளோடு செல்லக் கூடாதெனத் தீர்மானித்துவிட்டது.
குளிர்காலம் வந்தது. குளிரின் ஆக்ரோஷத்தில் அந்த சிட்டுக்குருவி கலங்கிவிட்டது.
கடைசியில், அதுவும் தெற்கு நோக்கிப் பறக்க தீர்மானித்தபோது, அந்தக் குளிரின் கடுமையில், பறந்தால் மரணம் நிச்சயம் என்பதை அறிந்து இருந்த இடத்திலேயே இருந்துவிட்டது.
அதன் இறக்கைகளில் பனி படர்ந்து, அதனை பறக்கவிடாமல் செய்ததோடு, அது மரத்தினின்று கீழே ஒரு விவசாயியின் வீட்டு முற்றத்தில் வீழ்த்திவிட்டது.
அந்த முற்றத்தில் சென்று கொண்டிருந்த பசு ஒன்று, அந்த சிட்டுக்குருவி மீது சாணம் போட்டுவிட்டுச் சென்றுவிட்டது.
சிட்டுக் குருவிக்கு மூச்சு திணறினாலும், அந்த சாணத்தின் சூடு வெப்பம் அதற்கு இதமாக இருந்தது.
சூட்டினாலும், மூச்சுவிட முடிந்ததாலும் மகிழ்ச்சியுற்ற அந்த சிட்டுக்குருவி பாட ஆரம்பித்தது.
அந்தப் பக்கமாக வந்த பூனை, பாட்டு வரும் திசையைக் கண்டது.
சாணத்தை அகற்றிப் பார்த்தது. பறவையை பார்த்ததும், மகிழ்ச்சியோடு அதை விழுங்கிவிட்டது.
இனி,
இந்த கதையில், மகத்தான மூன்று வாழ்வியல் கருத்துகளை காணலாம்.
ஒன்று;
உன் மீது சாணம் போடுபவன், உன் எதிரியாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இரண்டு;
உன்னை சாணத்திலிருந்து அகற்றுபவன், உன் நண்பனாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.
மூன்று;
நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய், சாணத்தின் இதமான சூட்டில் அடங்கி இருக்கிறாய் என்றால், உன் வாயை மூடிக் கொண்டிரு.!' என மொழிகிறார் ஓஷோ.
எனவே,
காட்டில் விழுகின்ற
கடைசி மழைத்துளியில்,
துளிர்க்கும் விதையும்
ஆலமாய் ஆளும்;
ஆதலால்,
பொறுத்திரு,
மௌனம் பேரினிது.!
'புரட்சி எண்ணம் கொண்ட ஒரு சிட்டுக்குருவி, வாழ்ந்து வந்தது. இலையுதிர்கால இறுதிக் கட்டம் நெருங்கியபோது, மற்ற குருவிகள் அனைத்தும் தென் திசையை நோக்கிப் பறக்க ஆயத்தமாயின.
ஆனால், இந்த சிட்டுக் குருவி மட்டும் அவைகளோடு செல்லக் கூடாதெனத் தீர்மானித்துவிட்டது.
குளிர்காலம் வந்தது. குளிரின் ஆக்ரோஷத்தில் அந்த சிட்டுக்குருவி கலங்கிவிட்டது.
கடைசியில், அதுவும் தெற்கு நோக்கிப் பறக்க தீர்மானித்தபோது, அந்தக் குளிரின் கடுமையில், பறந்தால் மரணம் நிச்சயம் என்பதை அறிந்து இருந்த இடத்திலேயே இருந்துவிட்டது.
அதன் இறக்கைகளில் பனி படர்ந்து, அதனை பறக்கவிடாமல் செய்ததோடு, அது மரத்தினின்று கீழே ஒரு விவசாயியின் வீட்டு முற்றத்தில் வீழ்த்திவிட்டது.
அந்த முற்றத்தில் சென்று கொண்டிருந்த பசு ஒன்று, அந்த சிட்டுக்குருவி மீது சாணம் போட்டுவிட்டுச் சென்றுவிட்டது.
சிட்டுக் குருவிக்கு மூச்சு திணறினாலும், அந்த சாணத்தின் சூடு வெப்பம் அதற்கு இதமாக இருந்தது.
சூட்டினாலும், மூச்சுவிட முடிந்ததாலும் மகிழ்ச்சியுற்ற அந்த சிட்டுக்குருவி பாட ஆரம்பித்தது.
அந்தப் பக்கமாக வந்த பூனை, பாட்டு வரும் திசையைக் கண்டது.
சாணத்தை அகற்றிப் பார்த்தது. பறவையை பார்த்ததும், மகிழ்ச்சியோடு அதை விழுங்கிவிட்டது.
இனி,
இந்த கதையில், மகத்தான மூன்று வாழ்வியல் கருத்துகளை காணலாம்.
ஒன்று;
உன் மீது சாணம் போடுபவன், உன் எதிரியாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இரண்டு;
உன்னை சாணத்திலிருந்து அகற்றுபவன், உன் நண்பனாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.
மூன்று;
நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய், சாணத்தின் இதமான சூட்டில் அடங்கி இருக்கிறாய் என்றால், உன் வாயை மூடிக் கொண்டிரு.!' என மொழிகிறார் ஓஷோ.
எனவே,
காட்டில் விழுகின்ற
கடைசி மழைத்துளியில்,
துளிர்க்கும் விதையும்
ஆலமாய் ஆளும்;
ஆதலால்,
பொறுத்திரு,
மௌனம் பேரினிது.!