மனவலிமை கொள்க, உயர்வாழ்வு வெல்க : விவேகானந்தர் குரல்

By 
மனவலிமை கொள்க, உயர்வாழ்வு வெல்க : விவேகானந்தர் குரல்

நாம் நினைக்கும் ஒவ்வொரு எண்ணமும், நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் சூட்சுமமாக நம்மிடமே  திரும்புகின்றன.

* யாருடைய நம்பிக்கையையும் கலைக்க முயலாதீர். முடியுமானால், இன்னொரு நல்ல நம்பிக்கையை அவனுக்குள் செலுத்துங்கள்.

* இயற்கையோடு இயைந்து வாழ்தல்தான், மனித சமுதாயத்தின் வளர்ச்சியாகும். 
வரலாற்றைப் பார்த்தால், மனிதவளர்ச்சி இதனால் தான்  உண்டாகிறது.
 
* மனிதன் தன் வாழ்க்கையைத் தானே உருவாக்கிக் கொள்கிறான். தனக்குத் தானே அமைத்துக் கொள்ளும் விதிகளைத்தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்படத் தேவையில்லை.
 
* தைரியமாக இருங்கள். உங்கள் விதியை நிர்ணயிக்கும் சக்தியைப் பெறுவீர்கள். நல்ல செயல்களுக்கும், இதயப்பூர்வமான நன்மைகளுக்கும்  இறைவனே முன்நின்று உதவுவார்.
 
* தொடங்கப்பட்ட முயற்சியில் தடை உண்டானால், மனவலிமையை மேலும் அதிகப்படுத்தி பாடுபடுங்கள். விடாமுயற்சியுடன் செயலை  நிறைவேற்றி மகிழ்வதே உயர்வாழ்விற்கான அறிகுறியாகும்.
 
* பெரியவர்கள் பெரிய தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும் நன்மைகளை, மனிதகுலம் பெற்று அனுபவிக்கிறது.
 
* இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய மூன்றும் நமக்குத் தேவை.
 
* நமக்கு மரணம் வருவது உறுதியாக இருக்கும்போது, நல்ல ஒரு செயலுக்காக உயிரை விடுவதே மேலானது.
 
* தெய்வீகத்தன்மை இல்லாமல் பெறுகின்ற மிதமிஞ்சிய அறிவும் ஆற்றலும் மனிதர்களை கீழானவர்களாக மாற்றிவிடும்.
 
* சண்டை போடுவதிலும், குறைகூறிக் கொண்டிருப்பதிலும் கூட, என்ன பயன் இருக்கிறது. நிலைமையைச் சீர்படுத்தி அமைக்க அவை நமக்கு  உதவப் போவதில்லை.

* நம் மனநிலைக்கு தகுந்தவாறு உலகம் காட்சியளிக்கிறது. நமது எண்ணங்களே உலகத்தை அழகுடையதாகவும், அவலட்சணமுடையதாகவும் ஆக்குகின்றன.

Share this story