நாளை என்று, ஒன்று கிடையாது. இன்று நிஜம் : ஓஷோ
ஓஷோவின் பல உயரிய துத்துவங்களில், சுருக்கமாக 10 பார்ப்போம். வாங்க..!
1. கொஞ்சம் முட்டாளாய் இருந்தால், வாழ்க்கையை ரசிக்கலாம். கொஞ்சம் புத்திசாலியாய் இருந்தால், தவறுகளை திருத்தலாம்.
2. உன்னைத் தவிர, வேறு யாராலும் உன்னைத் தடுக்க முடியாது. உன் வழியில் நீயே குறுக்கே நிற்காதே.
3. நகைச்சுவை உணர்வு, ஆழ்ந்த அன்பு செலுத்தும் தன்மை இவைகளோடு நாம் இருப்பதுதான், உயிரோடு இருப்பதாக அர்த்தம் ஆகும்.
4. இறைவன் வேண்டியதை தருபவர் அல்ல. இறைவன் வாழ்க்கைக்கு தேவையானதை தருபவர் ஆவார்.
5. ஒருவர் தன்னிடமே சமாதானமாய், சுகமாய் இருக்க முடியவில்லை என்றால், அவரால் யாரிடமும் சமாதானமாய் அமைதியாய் இருக்க முடியாது.
6. பேசும்போது பயப்படாதீர்கள். அதேபோல, பயப்படும்போது பேசாதீர்கள்.
7. பயத்தின் முடிவே, வாழ்க்கையின் தொடக்கம் ஆகும்.
8. நிபந்தனையின்றி, உன்னையே கொடுப்பதுதான் அன்பு.
9. இந்த கணம்தான் உண்மை. இதைத் தவிர்த்து, மற்றவை அனைத்தும் நினைவுகளும் கற்பனையும்தான்.
10. அகங்காரத்திற்கு சிரிக்கவே தெரியாது.