ராமேஸ்வரம் மூன்று தீர்த்தங்கள்..

By 
ram3

சிவ தீர்த்தம் : இத்தீர்த்தம், சுவாமி சந்நிதிக்கும் அம்பிகை சந்நிதிக்கும் இடையே அமைந்த அழகிய திருக்குளம். பைரவர் இத்தீர்த்தத்தில் நீராடி பிரமஹத்தி பாவத்தை நீக்கிக் கொண்டார். இதற்கு சிவகங்கைத் தீர்த்தம் என்னும் பெயரும் உண்டு. 

சாத்தியாமிருத தீர்த்தம் : இத்தீர்த்தம், அம்பிகை திருச்சன்னதியில் சுக்கிரவார மண்டபத்திற்குத் தென்கிழக்கில் உள்ள கிணறு. புரூரவச் சக்கரவர்த்தி இத்தீர்த்தத்தில் நீராடி தும்புரு சாபத்தைப் போக்கிக் கொண்டார். 

மூன்று தீர்த்தங்கள் : காயத்திரி தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம், சரசுவதி தீர்த்தம் என்னும் மூன்று தீர்த்தங்களும், கிழக்குக் கோபுரத்துக்கு வடக்கே மூன்று கிணறுகளாக அமைந்துள்ளன. இத்தீர்த்தங்களில் நீராடி காசிபர் சாபம் நீங்கப் பெற்றார்.


 

Share this story