தரைப்பாடி போல, தலை காட்டிப் போனாலும் தலைவனாக முடியாது : எடப்பாடி பழனிசாமிக்கு, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சூடு

By 
marudhu3

அதிமுக பொதுக்குழு தொடர்பாக நிகழும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக செய்தித் தொடர்பாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள கவிக்கனல் வருமாறு :

* வழியெங்கும் நின்று 
மக்கள் வரவேற்க..

விழி விரியும்
ஆர்வத்தால் 

தொண்டர்கள்
ஆர்ப்பரிக்க..

* தன்னெழுச்சி
கொண்டு

தாய்மார்கள்
இளைஞர்கள்
வாழ்த்திசைக்க.

ஜனத்திரளில்
நீந்தி வந்து

முகில் பிளந்து
முகம் காட்டும்
முழு மதிபோல்

வலம் வந்து
வற்றாத
தமிழால்
உரை தந்து..

மக்களின்
நெஞ்சத்தை
கொய்பவனே
தலைவன்...

* அதற்கு
மாறாக..

திரும்பிப் போ
வராதே 
எனும்

கருப்பு எழுத்து
சுவரொட்டிகள்
காரித்துப்ப..

காசுக்கு
திரட்டப்பட்ட
கூட்டம்

கடமைக்கு
கை தட்டி
கலைந்து போக...

* கூட்டத்தோடு
ஊருக்குள்

அயோக்கியன்
ஒருவன்

குற்ற உணர்வு
கொண்டவனாய்

குறுகுறுத்த
உள்ளத்தோடு

தரைப் பாடி
போல

தலை காட்டி
போனாலும்

அவன்

தலைவனாக
முடியாது...

அவனை

தமிழுலகம்
ஏற்காது..

-- இவ்வாறு அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

*

Share this story