அதிமுக கூறுவது சரியல்ல : அமைச்சர் துரைமுருகன்

By 
AIADMK is not right Minister Duraimurugan

தலைமைச் செயலகத்தில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

சட்டசபையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்திறப்பு விழா, எதிர்க்கட்சிகள் தோழமைக் கட்சியினரின் பங்களிப்புடன் நடைபெற வேண்டுமென முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஜனாதிபதி, கவர்னர் அமர்ந்துள்ள வரிசையில் ஒரு இடம் ஒதுக்கப்படும் என்றும், விழாவில் வாழ்த்தி பேசுவதற்கு வாய்ப்பு தரப்படும் என்றும் சொல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

அதன்படி, நானும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புகொண்டு அழைப்பு விடுத்தேன். 

நீங்கள் விழாவுக்கு வரவேண்டும் என்று முதலமைச்சர் விரும்புகிறார்.

விழா மேடையில் எங்களுடன் சரிசமமாக உட்கார்ந்து வாழ்த்துரை தெரிவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தேன். அதற்கு அவர் நான் சேலத்துக்கு காரில் சென்று கொண்டிருக்கிறேன். ஊருக்கு சென்று இறங்கியதும், கலந்து பேசிவிட்டு சொல்வதாக கூறினார்.

ஆனால், அதன்பிறகு அவர் என்னிடம் எந்த பதிலும் சொல்லவில்லை. சட்டசபைச் செயலாளரை, போனில் தொடர்பு கொண்டு நாங்கள் விழாவுக்கு வரவில்லை என்று கூறிவிட்டார்.

என்னிடம் சொன்னால் வற்புறுத்தி விழாவுக்கு அழைப்பேன் என்பதால், என்னுடன் அவர் பேசவில்லை.

நாங்கள் அவருக்கு உள் மனதோடு உரிய மரியாதை தரப்படும் என்று அழைத்து பார்த்தோம். 

ஆனால், இதற்கு முன்பு நடந்த ஜெயலலிதா படத்திறப்பு விழாவுக்கு எங்களை அப்படி அழைக்கவில்லை. பத்தோடு பதினொன்றாக அழைப்பிதழ் அனுப்பி வைத்திருந்தனர்.

எனவே, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொல்வதுபோல், தி.மு.க. புறக்கணித்ததால், இப்போது நாங்கள் கலைஞர் படத்திறப்பை புறக்கணித்தோம் என்று கூறுவது சரியல்ல' என்றார்.

Share this story