திமுக முப்பெரும் விழா : முதல்வர் ஸ்டாலின் விருதுகள் வழங்கி பேச்சு..

By 
dmkv

தி.மு.க முப்பெரும் விழா இன்று பிரமாண்டமாக நடக்கிறது. இதில் கலைஞர் அறக்கட்டளை சார்பில் தமிழகத்தில் உள்ள 4 மண்டலங்களில் ஒன்றியம் நகரம் பகுதி பேரூர் ஆகியவற்றில் கட்சி பணிகளில் சிறப்பாக செயல்படும் தலா ஒருவருக்கு நற்சான்று பண முடிப்பினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்குகிறார்.

விருது வழங்கும் விழாவில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ. வரவேற்று பேசுகிறார். தி.மு.க. பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் விழாவிற்கு தலைமை தாங்குகிறார். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் விருதை கி.சத்திய சீலனுக்கும் அண்ணா விருதை கா.சுந்தரத்திற்கும், கலைஞர் விருதை ஐ.பெரியசாமிக்கும் பாவேந்தர் பாரதிதாசன் விருதை திருமதி மலிகா கதிரவனுக்கும், பேராசிரியர் விருதை ந.இராமசாமிக்கும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையொட்டி வேலூரில் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி வேலூர் புதிய பஸ்நிலையம் பின்புறம் அருகே உள்ள தனியார் ஓட்டல், பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலை, மேல்மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மற்றும் முப்பெரும் விழா நடைபெறும் கந்தனேரி ஆகிய பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ராட்சத பலூன்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறி டிரோன்கள், ராட்சத பலூன்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


 

Share this story