தமிழகத்தில், அக்டோபர் 4-ந்தேதி தேர்தல் : ஆணையம் அறிவிப்பு
இந்திய தேர்தல் ஆணையம்
தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மாநிலங்களில் மொத்தம் 7 எம்.பி. இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :
* தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 4-ந்தேதி நடைபெறும்.
* கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் எம்.பி. பதவியை ராஜினாமா செய்த நிலையில், 2 இடங்களுக்கும் அக்டோபர் 4-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.
* தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மாநிலங்களில், மொத்தம் 7 எம்.பி. இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
* காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும். மாலை 5 மணிக்கு, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.