கோவில்களில், 3 வேளை அன்னதானம் தரும் திட்டம் : முதல்வர் தொடங்கி வைத்தார்

By 
In temples, the scheme of giving alms 3 times Chief Minister started

திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம் கோவில்களில் 3 வேளை அன்னதானம் தரும் திட்டத்தை தலைமைச்செயலகத்தில் காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியில், இந்து சமய அறிநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ஆணையர் குமரகுருபரன் பங்கேற்றனர்.

ஏற்கனவே உள்ள ஸ்ரீரங்கம், பழனி கோவில்களையடுத்து 3 வேளை அன்னதான திட்டம் நடைபெறும் கோவில்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

சமயபுரம் கோவிலில் தலைவாழை இலையில் ஜாங்கிரி, சாதம், சாம்பார், கூட்டு, பொரியல், வடை, பாயாசம், ரசம், மோர் வழங்கப்பட்டது.

சமயபுரம் கோவிலில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை 3 வேளை அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்படும் வரை, நாளை முதல் கோவில்களில் அன்னதானம் பார்சலில் வழங்கப்படும்.

Share this story