உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி..விருப்ப மனு விவரம் : விஜயகாந்த் அறிவிப்பு
தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர், நாளை மற்றும் நாளை மறுநாள் மாவட்ட தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு பெறலாம்.
9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல், அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது.
இன்று வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. இதற்காக, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.
இந்நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
* 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும்.
* போட்டியிட விரும்புவோர் நாளை மற்றும் நாளை மறுநாள் மாவட்ட தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு பெறலாம்.
* மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.4000, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.2000 செலுத்தி, மனு பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.