கட்சியில் சேர, புதிய விதிமுறைகள் வெளியீடு : காங்கிரஸ்

By 
Join the Party, Publication of New Rules Congress

காங்கிரஸ் கட்சி நவம்பர் 1-ம் தேதி முதல் 2022ம் ஆண்டு மார்ச்31ம் தேதிவரை புதிய உறுப்பினர்களைச் சேர்க்க உள்ளது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி முதல் செப்டம்பர் 20ம் தேதிக்குள் புதிய தலைவரையும் தேர்ந்தெடுக்க உள்ளது.

இந்நிலையில், வரும் 26 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் குழுக் கூட்டம் கூடி, புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பற்கான விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்க இருக்கிறது.

இந்நிலையில்,  புதிய உறுப்பினருக்கான 10 விதிகளை வெளியிட்டுள்ளது. அதில்

* அங்கீகரிக்கப்பட்ட காதி ஆடைகளை தொடர்ந்து அணிவதை பழக்கமாகக் கொள்வேன்.

*  எந்த மது வகைகளையும் குடிக்கமாட்டேன், போதை மருந்துகளையும் பயன்படுத்தமாட்டேன்.

*  சமூகரீதியான பாகுபாட்டை எந்தரீதியிலும் , எந்தவடிவத்திலும் பின்பற்றமாட்டேன் நம்பமாட்டேன். யாரையும் நீக்கவும் பயன்படுத்தமாட்டேன்.

* மதம் மற்றும் சாதி பாகுபாடின்றி ஒருங்கிணைந்த சமூகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

* காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டி பிறப்பிக்கப்படும் உத்தரவுக்கு இணங்க குறைந்தபட்சம் களப்பணியாளராக நான் கட்சிக்காகப் பணியாற்றுவேன்.

* சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக சொத்துக்களை வைத்திருக்கமாட்டேன்.

* மதச்சார்பின்மை, சகோதரத்துவம், ஜனநாயகம் ஆகியவற்றின் கொள்கைகளை பரப்பும் நோக்கில் நான் கட்சிக்காகப் பணியாற்றுவேன்.

* கட்சியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகளை, திட்டங்களை, கட்சிக்கு உரிய வழிமுறை தவிர்த்து வேறு எந்த வழியிலும், பொதுவெளியிலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எதிர்மறையாக விமர்சிக்கமாட்டேன்.

* அனைத்து இந்தியர்களின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் அதை முன்னிறுத்தியே உழைப்பேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story