உண்மை இருப்பதால்தான், மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார் : வைகோ பேச்சு

பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளையொட்டி, மதுரை வலையங்குளம் பகுதியில் வருகிற செப்டம்பர் 15-ந்தேதி ம.தி.மு.க. சார்பில் மாநில மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய தணிக்கை குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளபடி மருத்துவ காப்பீட்டில் ஊழல் நடந்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதாரங்கள், அடிப்படை காரணங்கள் இல்லாமல் எதையும் கூறியிருக்க மாட்டார். இந்த குற்றச்சாட்டில் உண்மை இருப்பதால்தான் கூறியிருப்பார்.
வருகிற செப்டம்பர் 15-ந்தேதி மதுரையில் அண்ணா பிறந்தநாளையொட்டி மாநில மாநாடு நடத்த உள்ளோம். அந்த இடத்தினை ஆய்வு செய்வதற்காக தான் தற்போது மதுரை வந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.