தமிழக அரசே காரணம் : பாராளுமன்றத்தில், நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
 

By 
nc1

பாராளுமன்ற மக்களவையில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

தமிழகத்தை பற்றி பேச நிறைய இருக்கிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மதிப்பீடு ரூ.1900 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட தாமதமாவதற்கு தமிழக அரசே காரணம்.

எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மீண்டும் மீண்டும் தவறான தகவல்களை கொடுக்க வேண்டாம். மதுரை எய்ம்ஸ் கல்லூரி மாணவர்கள் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார்கள்.

மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்குவதால் தமிழக அரசுக்கு நிதி சுமையும் ஏற்படாது. மற்ற மாநிலங்களைவிட மதுரையில் கட்டப்படும் எய்ம்ஸ் கல்லூரியில் கூடுதல் படுக்கை வசதி அனுமதிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நிறுவனத்தின் கடன் மூலம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயமாக கட்டித் தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

நிர்மலா சீதாராமன் பேசிக்கொண்டிருந்த போதே அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
 

Share this story