பிரதமர் மோடி எனக்கு மெசேஜ் அனுப்பினார் : கிறிஸ் கெய்ல் மகிழ்ச்சி
இந்திய மக்களுடனான நெருக்கம் மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது என கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் இன்று 73-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த குடியரசு தினத்தில், பிரதமர் மோடி தனக்கு தனிப்பட்ட முறையில் மேசேஜ் அனுப்பினார் என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, ட்விட்டரில் அவர் கூறியதாவது :
இன்று, இந்தியா 73-வது குடியரசு தினத்தை கொண்டாடி வருகிறது. அனைத்து இந்தியர்களுக்கும் எனது வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய பிரதமர் மோடி எனக்கு தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பியுள்ளார். நான் அவரிடம் இருந்து வந்த மெசேஜ்ஜை பார்த்து தான் கண் விழித்தேன்.
அவருடனும், இந்திய மக்களுடனான எனது தனிப்பட்ட நெருக்கம் இது மூலம் மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அவருடைய அன்புக்கு எனது வாழ்த்துகள்.
இவ்வாறு கிறிஸ் கெய்ல் கூறினார்.
*