'கருணாநிதிக்கு நினைவிடம்' மனதார வரவேற்க கடமைப்பட்டுள்ளோம் : பேரவையில் ஓ.பன்னீர்செல்வம்
சினிமாவில் கலைஞரின் வசனம் அனல்பறக்கும்; அது சமூகத்தை முன்னேற்ற துணை நின்றுள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
கலைஞர் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படும் என்ற அறிவிப்பை அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் மனதார வரவேற்க கடமைப்பட்டுள்ளோம் என்று சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இதைத்தொடர்ந்து, அவர் கூறியதாவது :
* வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சருக்கு நன்றி. வரலாற்றில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயர் நிலைத்து நிற்கும்.
* 50 ஆண்டு எம்.எல்.ஏ.வாக இருந்த கருணாநிதி, பல சிறப்பு சட்டங்களை தமிழகத்துக்கு கொண்டுவந்தவர்.
* சினிமாவில் கலைஞரின் வசனம் அனல்பறக்கும்; அது சமூகத்தை முன்னேற்ற துணை நின்றுள்ளது.
* என் தந்தை கலைஞரின் தீவிர பக்தர். தந்தை இல்லாத நேரத்தில் மனோகரா, பராசக்தி கதைகளை எடுத்து நாங்கள் படித்துள்ளோம்' என்றார்.