தேசிய விளையாட்டு விருதுகள் : விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு

 

By 
awards

மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருது, துரோணாச்சார்யா விருது, தியான் சந்த் விருது, தேசிய விளையாட்டு ஊக்குவிப்பு விருது மற்றும் நடப்பாண்டிற்கான மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பை ஆகியவற்றுக்கு, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சகம் விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பை வெளியிட்டது.

ஆகஸ்ட் 27 அன்று இதற்கான அறிவிப்பு அமைச்சகத்தின் www.yas.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி நேற்றுடன் (செப்டம்பர் 27) நிறைவடைந்த நிலையில், அக்டோபர் 1ந் தேதி(சனிக்கிழமை) அது நீடிக்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ள விளையாட்டு வீர்ர்கள், பயிற்சியாளர்கள், அமைப்புகள், பல்கலைக்கழகங்கள் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள dbtyas-sports.gov.in என்ற இணையப்பக்கத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அக்டோபர் 1-ந் தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது என்று மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story