சிறந்த அணியிடம்தான் தோற்றோம்; நாங்கள் நேர்மறையாக இருக்கிறோம் : கேப்டன் வில்லியம்சன்

By 
villi

ஐபிஎல் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் தொடர் வெற்றிக்கு குஜராத் முற்றுப்புள்ளி வைத்தது. அந்த அணி 3-வது தோல்வியை தழுவியது. 

இந்த தோல்வி குறித்து ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் கூறியதாவது :

இது ஒரு அற்புதமான கிரிக்கெட் போட்டியாகும். 40 ஓவர்கள் முழுவதும் சிறப்பாக இருந்தது. வித்தியாசமான ஆட்டமாக இருந்தது. நாங்கள் நெருங்கி வந்துதான் தோற்றுள்ளோம். 

இதனால், நாங்கள் நேர்மறையாக இருக்கிறோம். சிறந்த அணியிடம்தான் நாங்கள் தோற்றுள்ளோம். குஜராத் அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

ரஷீத்கான் ஏற்கனவே இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவர் மீண்டும் சிறப்பாக ஆடி உள்ளார். இந்த போட்டி மூலம் நாங்கள் ஏராளமான விஷயங்களை கற்றோம். 

ஆனால், அதே நேரத்தில் 2 சிறந்த அணிகள் மோதும்போது, இது மாதிரி நடக்கலாம். கடைசி ஓவரை வீசிய ஜான்சென் மீண்டும் பலம் பெற்று திரும்புவார். இன்னும் நிறைய ஆட்டங்கள் இருக்கிறது' என்றார்.

ஐதராபாத் அணி அடுத்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை வருகிற 30-ந் தேதி எதிர்கொள்கிறது.

குஜராத் அணி 7-வது வெற்றியை பெற்றது. அதன் மூலம், அந்த அணி புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்தது. குஜராத் 9-வது போட்டியில் பெங்களூரை 30-ந் தேதி சந்திக்கிறது.

Share this story