உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி : பதக்கம் வென்ற முதல் இந்திய ஜோடி; வரலாற்று சாதனை..

By 
record3

27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

இதில் நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா-சோ யூ யிக் ஜோடியைச் சந்தித்தது.

இந்த ஆட்டத்தில் 22-20 என முதல் செட்டில் முன்னிலை பெற்ற சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி அடுத்த இரண்டு செட்களில் 18 - 21,16 - 21 என்ற புள்ளிக்கணக்கில் போராடி தோல்வியுற்றனர்.

இதன்மூலம் அவர்களுக்கு வெண்கலம் கிடைத்தது. இந்த வெண்கலப் பதக்கத்தின் மூலம் உலக பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற வரலாற்று சாதனையை படைத்தனர்.

Share this story