பேட்மிண்டன் கெத்து : ஸ்ரீகாந்த்-சிந்து, தொடர்ந்து செம எனர்ஜி..பலே பாய்ச்சல்..

By 
Badminton Carving Srikanth-Sindhu, Continuing Chema Energy..Pale Jump ..

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டி பாலி நகரில் நடந்து வருகிறது. 

இதில், நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தரவரிசையில், 22-வது இடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியுடன் மோதினார்.

1 மணி 10 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் சிந்து 17-21, 21-17, 21-17 என்ற செட் கணக்கில் ஒஹோரியை போராடி வீழ்த்தி, 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில், இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-15, 19-21, 21-12 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரரான எச்.எஸ். பிரனாயை சாய்த்து 2-வது சுற்றை எட்டினார். 

மற்றொரு ஆட்டத்தில், இந்திய வீரர் சாய் பிரனீத் 21-19, 21-18 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீரர் தோமா ஜூனியர் போபோவை வீழ்த்தினார்.

Share this story