19-ந்தேதி சென்னையில் கிரிக்கெட் : தமிழக அரசு அனுமதி

By 
Cricket in Chennai on the 19th Government of Tamil Nadu permission

2021-ம் ஆண்டு டி.என்.பி.எல். தொடரை பார்வையாளர்கள் இன்றி, கடுமையான கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளுக்குட்பட்டு நடத்துவதற்கு, தமிழக அரசு முறையாக அனுமதி வழங்கியுள்ளது.

8 அணிகள் பங்கேற்கும் 5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை முதலில் நெல்லை, திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டது. 

இப்போது, இந்த போட்டி முழுமையாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டு, தமிழக அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. 

இதன்படி, 5-வது   டி.என்.பி.எல். கிரிக்கெட் வருகிற 19-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந்தேதி வரை நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி, சேலம் ஸ்பார்டன்சுடன் மோதுகிறது.
*

Share this story