டிஎன்பிஎல் : திருச்சி வாரியர்ஸ் ஏறுமுகம்..13-ந்தேதி சூப்பர் கில்லீசுடன் மோதல்?

By 
DNPL Trichy Warriors on the rise..can clash with Super Gillies on the 13th

டிஎன்பிஎல், பிரிமீயர் லீக் டி20 தொடரில் தகுதிச்சுற்று-1 போட்டி நடைபெற்றது. 

இதில், ரூபி திருச்சி வாரியர்ஸ்- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் களம் இறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் சேப்பாக்கம் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. ராதாகிருஷ்ணன் 82 ரன்னும், சதீஷ் 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து, 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. 44 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

பொறுப்பான ஆட்டம் :

நிதிஷ் ராஜகோபாலுடன் ஜோடி சேர்ந்த ஆதித்ய கணேஷ் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

சிறப்பாக ஆடிய ராஜகோபாலும், ஆதித்ய கணேஷும் அரை சதமடித்து அசத்தினர். நிதிஷ் ராஜகோபால் 55 ரன்னில் அவுட்டானார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தது.

157 ரன்கள் :

கடைசி 2 ஓவரில் திருச்சி அணி வெற்றி பெற 11 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரில் 5 ரன்கள் கிடைத்தது.கடைசி ஓவரின் 5-வது பந்தில் வெற்றியை ருசித்தது திருச்சி அணி.

இறுதியில், திருச்சி அணி 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆதித்ய கணேஷ் 66 ரன்களுடன் அவுட்டாகாமல் உள்ளார். இந்த வெற்றியின் மூலம் திருச்சி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

நாளை நடைபெறும் வெளியேறுதல் சுற்றில், வெற்றிபெறும் அணியுடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 13-ம் தேதி மோதுகிறது.

Share this story