இலங்கை அணியை வீழ்த்தி, தொடரையும் வென்றது இங்கிலாந்து; எப்படியெனில்..

By 
England defeated Sri Lanka to win the series; Anyway ..

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முன்னிலை :

முதல் டி 20 போட்டியில் வென்ற இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது.
 
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி கார்டிப்பில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இங்கிலாந்து வீரர்களின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. குசால் மெண்டிஸ் 39 ரன்னும், குசால் பெராரா 21 ரன்னும் எடுத்தனர்.

இங்கிலாந்து சார்பில் மார்க் வுட், அடில் ரஷித் தலா 2 விக்கெட்டும், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். 36 ரன்களுக்குள்  4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

சாம் பில்லிங்சும், லிவிங்ஸ்டோனும் தாக்குப்பிடித்து நின்றனர். அப்போது மழை குறுக்கிட்டது. இதனால், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்துக்கு 18 ஓவரில் 103 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

108 ரன்கள் :

இறுதியில், இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு வெற்றிக்கு தேவையான 108 ரன்களை எடுத்தது. லிவிங்ஸ்டோன் 29 ரன்னுடனும், சாம் கரன் 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-0 என டி 20 தொடரை கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது லிவிங்ஸ்டோனுக்கு அளிக்கப்பட்டது.

Share this story