மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது : கே.எல்.ராகுல் வேதனை
Jan 24, 2022, 14:43 IST
By
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி ஒயிட்வாஷ் ஆனது.
போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து, தற்காலிக கேப்டன் லோகேஷ் ராகுல் கூறியதாவது :
நாங்கள் எங்கு தவறு செய்தோம் என்று தெளிவாக தெரிகிறது.
ஆல்-ரவுண்டர் தீபக் சாஹர், போட்டியில் வெற்றிபெறக் கூடிய வாய்ப்பை அளித்தார்.
கடுமையாக போராடியும், ஆட்டத்தின் முடிவில் வெற்றி பெற முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
தீபக் சாஹரின் ஆட்டம் மிகவும் பிரமாதமாக இருந்தது. எங்கள் வீரர்களின் ஷாட் மோசமாக இருந்தது. சரியான திசையை நோக்கி நாங்கள் அடிக்கவில்லை' என்றார்.
இந்திய அணி, அடுத்து சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் ஆடுகிறது.
*