4 ரன்னில் ஆட்டமிழந்து.. சாராவிற்காக சுப்மன் கில் இப்படி செய்யலாமா? : ரசிகர்கள் விமர்சனம்..

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சுப்மன் கில் 4 ரன்களில் ஆட்டமிழந்தது, 2003 உலகக் கோப்பையில் சச்சின் 4 ரன்களில் வெளியேறியதை நினைவுபடுத்தியுள்ளது.
இந்தியாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதுவரையில் விளையாடிய 10 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு வந்தது. இதே போன்று ஆஸ்திரேலியாவும் விளையாடிய 10 போட்டிகளில் 8ல் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு வந்தது.
எனினும், அதிலிருந்து தப்பித்த அவர், ஸ்டார்க் வீசிய 5ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் கில் எளிதாக கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் கொடுத்த கேட்சை ஆடம் ஜம்பா பிடித்தார். கில் 7 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
இதற்கு முன்னதாக கடந்த 2003 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 5 பந்துகளில் ஒரு பவுண்டரி உள்பட 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இப்படி சச்சின் செய்ததை, கில்லும் செய்து வரும் நிலையில், சாராவிற்காக தான் சுப்மன் கில் இவ்வாறு செய்ததாக ரசிகர்கள் பலரும் விமர்சிக்கத் தொடங்கினர்.