முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், சிஎஸ்கே அணிக்கு இன்று பாராட்டு விழா..

By 
In the presence of Chief Minister Stalin, the CSK team was felicitated today.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான பாராட்டு விழாவில் அணியின் கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்களின் குடும்பங்கள் கலந்து கொள்கின்றன.

ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர்  கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து, சென்னை அணி வீரர்களுக்கு பாராட்டுவிழா விரைவில் நடத்தப்படும் என்று  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் கூறியிருந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், பாராட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. 

இவ்விழாவில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்களின் குடும்பங்கள் கலந்து கொள்கின்றன.
 
இந்த விழாவிற்கு, ராஞ்சியில் இருந்து தனி விமானத்தில் டோனி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

Share this story