இந்தியா-இலங்கை கிரிக்கெட் : 17-ந்தேதி தள்ளிவைப்பு..

By 
India-Sri Lanka cricket Postponement on the 17th ..

வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தி அந்த முடிவுக்கு தகுந்தபடி, கொரோனா தடுப்பு வளையத்துக்குள் கொண்டு வரலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், கொழும்பில் வரும் 13-ம் தேதி தொடங்க இருந்த இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் 4 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மாற்றப்பட்ட அட்டவணையின்படி, முதலாவது ஒரு நாள் போட்டி 17-ம் தேதி நடக்–கிறது. 2-வது ஒருநாள் போட்டி 19-ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 21-ம் தேதியும் நடைபெறுகிறது. 

3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடர் முறையே 24, 25, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிகிறது.

போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை, இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்து இருக்கிறது. 

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் வரும் 13-ம் தேதிக்கு பதிலாக 17-ம் தேதி தொடங்கும். வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு, இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் கலந்து ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கிரிக்கெட் வாரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this story