வெற்றியை விரட்டிப் பிடித்த 'கெத்து' : நம்ம சிந்துவை முந்த முடியுமா..?

By 
'Kethu' chasing success Can it overtake our Sindh ..

துருக்கி வீராங்கனை நெஸ்லிகனுடன் இதுவரை நேருக்கு நேர் மோதிய 4 போட்டிகளிலும், சிந்து வெற்றி பெற்றுள்ளார்.

இந்தோனேசிய மாஸ்டர்ஸ் சூப்பர்-750 பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். 

இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், பி.வி.சிந்து, துருக்கி வீராங்கனை நெஸ்லிகன் யிஜித்தை எதிர்கொண்டார்.

துவக்கம் முதலே ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிந்து, 35 நிமிடங்களில் 21-13, 21-10 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்றார். 

நெஸ்லிகனும் சிந்துவும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதி உள்ளனர். இதில், 4 போட்டிகளிலும் சிந்து வெற்றி பெற்றுள்ளார். கடந்த மாதம் டென்மார்க் ஓபனிலும் நெஸ்லிகனை வீழ்த்தினார்.
 
இந்தோனேசிய மாஸ்டர்ஸ் தொடரில், இதுவரை எளிதாக வெற்றி பெற்ற பி.வி.சிந்துவுக்கு அரையிறுதியில் கடும் சவால் காத்திருக்கிறது. 

ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி அல்லது தாய்லாந்து வீராங்கனை சோச்சுவாங்குடன் மோதுவார்.

Share this story