மீண்டும் ஜெயித்திட ஒன்றுபட்டு ஆடுவோம் : இளம் வீராங்கனை ஷபாலி வர்மா உறுதி
இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் பெண்கள் கிரிக்கெட் போட்டியில், இந்தியா 8 ரன் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றிபெற்றது.
ஹோவ் நகரில் நடந்த இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.
இதில், முதலில் பேட் செய்த இந்தியா ஷபாலி வர்மாவின் (48 ரன், 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) அதிரடி உதவியுடன் 4 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 140 ரன்களே எடுக்க முடிந்தது.
3 போட்டிகள் கொண்ட இந்த தொடர், தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ள நிலையில், கடைசி ஆட்டம் நாளை மறுதினம் நடக்கிறது.
48 ரன்கள் அடித்த இளம் வீராங்கனை ஷபாலி வர்மா கூறுகையில், 'அடுத்த ஆட்டத்திற்கு தயாராகி வருகிறோம். மீண்டும் வெற்றி பெறுவோம் என்ற முனைப்புடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம்' என்றார்.