மீண்டும் ஜெயித்திட ஒன்றுபட்டு ஆடுவோம் : இளம் வீராங்கனை ஷபாலி வர்மா உறுதி

By 
Let's play together to win again Young player Shabali Verma confirmed

இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் பெண்கள் கிரிக்கெட் போட்டியில், இந்தியா 8 ரன் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றிபெற்றது.

ஹோவ் நகரில் நடந்த இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. 

இதில், முதலில் பேட் செய்த இந்தியா ஷபாலி வர்மாவின் (48 ரன், 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) அதிரடி உதவியுடன் 4 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 140 ரன்களே எடுக்க முடிந்தது. 

3 போட்டிகள் கொண்ட இந்த தொடர், தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ள நிலையில், கடைசி ஆட்டம் நாளை மறுதினம் நடக்கிறது.

48 ரன்கள் அடித்த இளம் வீராங்கனை ஷபாலி வர்மா கூறுகையில், 'அடுத்த ஆட்டத்திற்கு தயாராகி வருகிறோம். மீண்டும் வெற்றி பெறுவோம் என்ற முனைப்புடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம்' என்றார்.

Share this story