விராட்கோலியின் வாழ்க்கை நிகழ்வுகள் : மஞ்ச்ரேக்கர் கருத்து

By 
Life events of Virat Kohli Manjrecker comment

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட்கோலி திடீரென விலகினார். 

அவரது விலகல் குறித்து, முன்னாள் வீரர்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இது தொடர்பாக, 'குறுகிய கால இடைவெளியில் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக, விராட்கோலியின் வாழ்க்கையில் நடந்து விட்டது. 

முதலில் ஐ.பி.எல். தொடரின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதன் பிறகு 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

அதன் பின்னர், ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து கோலி நீக்கப்பட்டார். தற்போது, டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகியது யாரும் எதிர்பாராதது. முக்கியமான பொறுப்புகளில் இருந்த கோலி, குறுகிய இடைவெளியில் வெளியேறி விட்டார்.

இந்திய கிரிக்கெட்டில் யாரும் நீக்க முடியாக கேப்டனாக வலம் வர வேண்டும் என்று கோலி விரும்பினார். 

அதனால்தான், அந்த முடிவை கிரிக்கெட் வாரியம் எடுக்கும் முன் தாமாகவே கேப்டன் பதவியை கோலி ராஜினாமா செய்துள்ளார்.
*

Share this story