மேக்ஸ்வெல்-பரத் பார்ட்னர்ஷிப் அருமை : கோலி புகழாரம்

By 
Maxwell-Bharath Partnership Awesome Goalie Praise

ஐபிஎல் கிரிக்கெட்டில், துபாயில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில், டெல்லி அணியை பெங்களூரு 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 164 ரன் எடுத்தது.

பரத்-மேக்ஸ்வெல் :

இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு அணி 55 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்தது. பின்னர், கே.எஸ்.பரத்-மேக்ஸ்வெல் ஜோடி சிறப்பாக ஆடியது.

பெங்களூரு அணி வெற்றிக்கு கடைசி பந்தில் 5 ரன் தேவைப்பட்டது. ஆவேஷ்கான் வீசிய அந்த பந்தில் கே.எஸ்.பரத் சிக்சர் அடித்தார். இதனால், பெங்களூரு த்ரில் வெற்றி பெற்றது. கே.எஸ்.பரத் 78 ரன்னும், மேக்ஸ்வெல் 51 ரன்னும் எடுத்தனர்.

சிறப்பு :

வெற்றி குறித்து, பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது :

இது நம்ப முடியாத வெற்றியாக இருந்தது. இந்த போட்டியால், நாங்கள் எதையும் இழக்க மாட்டோம் என்பது தெரியும். 

புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அணிக்கு எதிராக, சிறப்பாக விளையாடுவது நல்லதாகும்.

இந்த சீசனில் அவர்களை (டெல்லி) நாங்கள் 2 முறையும் தோற்கடித்து உள்ளோம். டிவில்லியர்ஸ், கே.எஸ்.பரத் ஜோடி முதலில் நன்றாக விளையாடியது. பின்னர் மேக்ஸ்வெல்-கே.எஸ்.பரத் ஜோடியின் பாட்னர்ஷிப் அருமையானது.

கே.எஸ்.பரத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 3-வது வீரராக களம் இறங்கி, சிறப்பாக விளையாட முடியும் என்பதை நாங்கள் அறிவோம். அவர் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக நன்றாக விளையாட கூடியவர்.

புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேற 163 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பது மிகவும் கடினமானது என்பதால் நாங்கள் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தோம். 

ரன் இலக்கை நோக்கி விளையாடி வெற்றி பெறுவது பிளே-ஆப் சுற்றுக்கு செல்லும் போது உங்களுக்கு பலவிதமான நம்பிக்கையை அளிக்கும்.

இந்த போட்டித்தொடரில், நாங்கள் அதிகமாக ரன் சேசிங் செய்யவில்லை. இதனால் 2-வது பேட்டிங்கின் போது நாங்கள் சிறப்பாக விளையாடுவது முக்கியமானதாக இருந்தது.

நாங்கள் பீல்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டும் என்று நான் கண்டிப்பாக நினைக்கிறேன். 

ஏனென்றால், பிளே-ஆப் சுற்றுக்கு வரும்போது எந்த அணியும் உங்களுக்கு 2-வது வாய்ப்பை வழங்காது' என்றார்.

Share this story