பாரா ஒலிம்பிக் டுடே : காலிறுதிக்கு தகுதி பெற்றார், இந்திய வீராங்கனை பவீனா
 

By 
Indian athlete Pavina qualifies for Paralympic Today quarterfinals

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கின் டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் பவீனா பட்டேல் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

162 நாடுகள் :

32-வது ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 7 பதக்கங்களை வென்றது. இதனைத் தொடர்ந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16-வது பாராலிம்பிக் போட்டிகள் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. 

இந்தியா சார்பில், 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். தற்போது பரபரப்பாக நடைபெற்று வரும்
மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில், 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே நடந்தது.

பவீனா பட்டேல் :

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் 4-வது நாளான இன்று, டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவீனா பட்டேல் அமர்ந்த நிலையில், ஜாய்ஸ் டி ஒலிவியராவுடன் விளையாடினார். 

இந்த போட்டியில் வெற்றி பெற்ற பவீனா காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

Share this story