டி20 மேட்ச் : மிரட்டியது நியூசிலாந்து அணி, மிரண்டது வங்காள தேச அணி..

By 
T20 match New Zealand intimidated, Bangladesh intimidated.

நியூசிலாந்து அணி வங்காள தேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 

முதல் இரு போட்டிகளில் வங்காளதேசம் வென்று, தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

பேட்டிங் :

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. 

அதிகபட்சமாக, ஹென்றி நிகோலஸ் 36 ரன்னும், டாம் பிளெண்டல் 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

டாம் பிளெண்டல் :

இதையடுத்து, 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. நியூசிலாந்து அணியினரின் பந்துவீச்சில் சிக்கி விக்கெட்டுகளை இழந்தது.

இறுதியில், வங்காளதேசம்  19.4 ஓவரில் 76 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பரிதாபமாக தோற்றது.

ஆட்டநாயகன் :

நியூசிலாந்து சார்பில், அஜாஸ் படேல் 4 விக்கெட்டும், மெக்கன்சி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம், 52 ரன்கள் வித்தியாசத்தில், நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. அத்துடன், டி20 தொடரில் 2-1 என பின்தங்கியுள்ளது. ஆட்ட நாயகன் விருது அஜாஸ் படேலுக்கு வழங்கப்பட்டது.

இரு அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி நாளை மறுதினம் நடைபெறுகிறது.

Share this story