டென்னிஸ் பரபரப்பு : இன்று 20-வது பட்டத்தை வெல்வாரா ஜோகோவிச்? 

By 
Tennis sensation Will Velvara Djokovic win his 20th title today

கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

ஆஷ்லி பார்ட்டி :

பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் முதல் நிலை வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 6-3, 6-7 (4-7), 6-3 என்ற செட் கணக்கில் கரோலினா பிளிஸ் கோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.

ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. இதில், உலகின் முதல்நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா)-ஏழாவது வரிசையில் உள்ள பெரேட்டினி (இத்தாலி) மோதுகிறார்கள்.

புதிய சாதனை :

ஜோகோவிச் இதுவரை 19 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று 2-வது இடத்தில் உள்ளார். 

இன்று வெற்றி பெற்றால், அதிக கிரண்ட்சிலாம் வென்று அதாவது 20 பட்டத்தை கைப்பற்றி முதல் இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்) சாதனையை சமன் செய்வார்.

அவர் புதிய சாதனையை படைப்பாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஜோகோவிச் விம்பிள்டன் பட்டத்தை 5 முறை கைப்பற்றி இருக்கிறார்.

Share this story