அந்த நிகழ்வு, எனக்கு வருத்தம் அளிக்கிறது : விராட்கோலி

By 
That event, makes me sad Viratkohli

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடந்தது. 

5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. 
இதனால், போட்டி டிரா ஆனது. 

மழையால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பறிபோனதாக கருதப்படுகிறது.

இந்தியாவின் வெற்றிக்கு மேலும் 157 ரன் தேவை, கைவசம் 9 விக்கெட் என்ற நிலையில் கடைசி நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. 

இந்த போட்டி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டதாகும். இதனால், இரு அணிகளுக்கும் தலா 4 புள்ளிகள் வழங்கப்பட்டது.

கடைசி நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக, இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது :

 'கடைசிநாளில் போட்டி நடந்திருந்தால், சிறப்பாக இருந்திருக்கும். நடக்காமல் போனது வருத்தம் அளிக்கிறது. 

இந்த டெஸ்டில், எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருந்ததை அறிவோம். நிச்சயம் எங்கள் கைதான் ஓங்கி இருந்தது' என்றார்.

Share this story