அந்தச் சுடர் பிரகாசமாக எரிவதில்லை, முழு ஓய்வு பெறுகிறேன், நன்றி : டிவில்லியர்ஸ்

By 
That flame does not burn brightly, I get full rest, thanks DeVilliers

தென் ஆப்பிரிக்காவின் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஏபி டிவில்லியர்ஸ், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

இந்த அறிவிப்பை அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'எனது பெற்றோர்கள், சகோதரர்கள், எனது மனைவி டேனியல்லே மற்றும் எனது குழந்தைகள் செய்த தியாகங்கள் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை என்பதை நான் அறிவேன். 

நன்றியுடன் இருப்பேன் :

எங்கள் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை முதலிடத்தில் வைக்கக் காத்திருக்கிறேன்.
 
நான் பயணித்த அதே பாதையில் பயணித்த என்னுடைய அணியினருக்கும், ஒவ்வொரு எதிரணியினருக்கும், ஒவ்வொரு பயிற்சியாளருக்கும், ஒவ்வொரு பிசியோ தெரபிஸ்ட் மற்றும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

மேலும், தென்னாப்பிரிக்காவிலும், இந்தியாவிலும், நான் விளையாடிய எல்லா இடங்களிலும் எனக்கு கொடுத்த ஆதரவிற்கு நான் நன்றியுடன் இருக்கிறேன்.

கிரிக்கெட் என்னிடம் மிகவும் அன்பாக இருந்தது. டைட்டனுக்காக, அல்லது புரோட்டீசுக்காக, அல்லது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்காக அல்லது உலகம் முழுவதும் விளையாடினாலும், கிரிக்கெட் எனக்கு கற்பனை செய்ய முடியாத அனுபவங்களையும் வாய்ப்புகளையும் கொடுத்துள்ளது, அதற்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.

37 வயதில் :

இது ஒரு நம்பமுடியாத பயணம். ஆனால், நான் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். 

எனது சகோதரர்களுடன் வீட்டிற்கு பின்புறம் விளையாடியதிலிருந்து, நான் முழு மகிழ்ச்சியுடனும், கட்டுக்கடங்காத உற்சாகத்துடனும் விளையாடி இருக்கிறேன். இப்போது, 37 வயதில், அந்தச் சுடர் அவ்வளவு பிரகாசமாக எரிவதில்லை.' என தெரிவித்துள்ளார்.

Share this story