33 வயதில் ஓய்வு முடிவை அறிவித்தார் பிரபல கிரிக்கெட் வீரர்; யார் தெரியுமா?

By 
stadium

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் டேவிட் வில்லி இங்கிலாந்து அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். அயர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலமாக ஒரு நாள் கிரிக்கெட்டில் இடம் பெற்றார். இதே போன்று நியூசிலாந்திற்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக டி20 கிரிக்கெட்டில் இடம் பெற்றார்.

இதுவரையில் 70 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 94 விக்கெட்டுகளும், 43 டி20 போட்டிகளில் விளையாடி 51 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். தற்போது இந்தியாவில் நடந்து 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். இதில், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்ளி காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய நிலையில் அவருக்குப் பதிலாக டேவிட் வில்லி அணியில் இடம் பெற்றார்.

இங்கிலாந்து அணி விளையாடிய 6 போட்டிகளில் வில்லி 3 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. எஞ்சிய 3 போட்டியில் வெற்றி பெற்றால் கூட இங்கிலாந்து அணியால் அரையிறுதிக்கு வாய்ப்பு செல்ல முடியாது. அப்படி வெற்றி பெற்றால் கூட மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளைப் பொறுத்து தான் இங்கிலாந்திற்கு அரையிறுதி வாய்ப்பு அமையும்.

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து டேவிட் வில்லி விலகுவதாக அறிவித்துள்ளார். வரும் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்க இருக்கிறது. ஆனால், அதற்குள்ளாக அவர் இந்த உலகக் கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து வில்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

இந்த நாள் வருவதை நான் ஒரு போதும் விரும்பவில்லை. சிறு வயது முதலே இங்கிலாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது. எனவே, கவனமாக சிந்தித்து, பரிசீலித்து, அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் நான் ஓய்வுபெறும் நேரம் வந்துவிட்டது என்பதை மிகவும் வருத்தத்துடன் உணர்கிறேன். உலகக் கோப்பையின் முடிவு.

நான் மிகுந்த பெருமையுடன் இங்கிலாந்து அணியின் ஜெர்சியை அணிந்திருக்கிறேன். உலகின் சிறந்த வீரர்கள் சிலருடன் ஒரு நம்பமுடியாத வெள்ளை பந்து அணியில் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு மிகவும் அதிர்ஷ்டம். நான்' வழியில் சில சிறப்பு நினைவுகள் மற்றும் சிறந்த நண்பர்களை உருவாக்கி, சில கடினமான காலங்களில் இருந்திருக்கிறேன்.

"என் மனைவி, இரண்டு குழந்தைகள், அம்மா மற்றும் அப்பா ஆகியோருக்கு, உங்கள் தியாகம் மற்றும் அசைக்க முடியாத ஆதரவு இல்லாமல் நான் என் கனவுகளைப் பின்தொடர முடியாது. சிறப்பு நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதற்கும், நான் பிரிந்தபோது துண்டுகளை எடுத்ததற்கும் நன்றி - நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்."

Share this story