டிராவில் முடிந்தால் வெற்றியாளரை தேர்வு செய்ய, புது வழிமுறை தேவை : கவாஸ்கர்
இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்ப்டன் நகரில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஐசிசியின் கவனத்திற்கு கூறியதாவது:
தற்போது நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி டிராவில் முடியும் என்றே தோன்றுகிறது.
கோப்பை பகிர்வு :
டிராவில் முடிந்தால், கோப்பை பகிர்ந்தளிக்கப்படும். உலக போட்டியில் கோப்பை கூட்டாக பகிர்வது இதுவே முதல்முறையாக இருக்கும்.
கால்பந்து விளையாட்டில் ஆட்டம் சமனில் முடிந்தால், வெற்றியாளரை முடிவு செய்ய பெனால்டி முறை கடைபிடிக்கப்படுகிறது. டென்னிஸ் போட்டியில் 5 செட் மற்றும் டைபிரேக்கர் கொண்டு வரப்படுகிறது.
புது வழிமுறை :
இதேபோல், வருங்காலத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி டிரா ஆகும்போது, இவ்விரு அணிகளில் ஒன்றை வெற்றியாளராக அறிவிக்கும் வழிமுறையைக் கண்டறிய வேண்டும்.
ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி இது குறித்து சிந்தித்து முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.