யாரையும் பின்பற்றும் எண்ணம், எங்களுக்கு இல்லை : ரோகித் சொல்லும் 'நியூ' அடையாளம்..
விராட்கோலி மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கையாளப்படும் ஆட்டம் குறித்து, புதிய கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இது தொடர்பாக, அவர் கூறியதாவது :
விராட் கோலியின் பங்களிப்பு அப்படியே இருக்கும். இதற்கு முன்பு, அவர் அணியில் எப்படி இருந்தாரோ, அதே பணியை தொடர்ந்து செய்வார்.
அவர் மிக முக்கியமான வீரர். பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர். ஒவ்வொரு போட்டியிலும் ஒரு அடையாளத்தை விட்டு செல்கிறார்.
விராட் கோலி திரும்பும்போது, அணிக்கு பலம் மட்டுமே கிடைக்கும். பேட்ஸ்மேனாக அவரது அனுபவம் அணிக்கு மிகவும் முக்கியமானது.
சிறு சிறு ஓட்டைகள் :
அணியில் சிறு சிறு ஓட்டைகள் இருக்கிறது. அதை சரி செய்வது மிகப் பெரிய சவாலாக இருக்கும்.
அனைத்து அணிகளிலும் இதேபோல் ஒரு பிரச்சினை இருக்கத்தான் செய்யும். எந்த அணியையும் பின் பற்றும் எண்ணம் எங்களுக்கு இல்லை. தனி அடையாளத்தை உருவாக்கவே விரும்புகிறோம்.
முதலில் பேட்டிங் செய்யும்போதும், 2-வது பேட்டிங் செய்யும்போதும் உள்ள ஒப்பீடு மாறுபட்டது. ஒவ்வொரு வீரரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்துவார்கள்.
தன்னம்பிக்கை :
20 ஓவர் போட்டியை பொறுத்தவரை, அச்சமின்றி விளையாடுவது அவசியமாகும். அதற்கு தன்னம்பிக்கை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது.
நாம் எப்போதுமே வெற்றிபெற முடியாது. தோல்வியும் ஏற்படும். ஆனால் அதே நேரத்தில் நமது பங்களிப்பு முக்கியமாக இருக்க வேண்டும்.
சையது முஸ்தாக் அலி மற்றும் ஐ.பி.எல். ஆகிய இரண்டு 20 ஓவர் தொடரில் வீரர்கள் விளையாடி உள்ளனர்.
இதிலிருந்து, அவர்கள் அனுபவங்களை பெற்றிருப்பார்கள். அதே மாதிரி பங்களிப்பில் விளை யாடுவது அவசியமாகும்' என்றார்.
நியூசிலாந்து அணி கேப் டன் வில்லியம்சன் 20 ஓவர் தொடரில் விளையாடவில்லை. அதனால், அவருக்கு பதிலாக சவுத்தி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
*